M.K.Stalin Greetings [File Image]
சிங்கப்பூரின் தற்போதைய அதிபராக உள்ள ஹலிமாவின் பதவிக்காலம் வரும் 13ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனால் கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இலங்கையை சேர்ந்த தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம் , இங் கொக் சொங் , டான் கின் லியான் ஆகியோர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த முறை முதன் முதலாக வெளிநாடு வாழ் சிங்கப்பூர்காரர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 1) நடைபெற்று நேற்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதில் தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று மற்ற இரு வேட்பாளர்களை காட்டிலும் அபார வெற்றி பெற்றார்.
தற்போது சிங்கப்பூரின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார். இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 9வது அதிபராக வெற்றி பெற்றுள்ள தமிழர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்ட வாழ்த்துச்செய்தியில், “சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.தர்மன்.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களின் தமிழ் பாரம்பரியம் மற்றும் ஈர்க்கக்கூடிய தகுதிகள் எங்களை பெருமைப்படுத்துகிறது மற்றும் சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. வெற்றிகரமான காலத்தை வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…