O Panneerselvam says about Madurai ADMK Meeting [File Image]
கடந்தாண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பில், இன்று ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், அதிமுக இயக்கமானது தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். நீதிமன்ற தீர்ப்பு, மேல்முறையீடு குறித்து அவர்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்போம் தெரிவித்தார் .
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு பற்றி பேசுகையில், நடந்த உண்மை பற்றி சம்பந்தபட்டவர்கள் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்கள் . அதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மதுரை மாநாடு பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், மதுரை மாநாடு பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது புளியோதரை கதையாக போய்க்கொண்டு இருக்கிறது என மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் உணவு வீணடிக்கப்பட்டதை மறைமுகமாக விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…