மதுரை ஆவினில் தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது அம்பலம்..!

Published by
லீனா

மதுரை ஆவினில் தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

மதுரை ஆவின் நிறுவனத்தில் திருப்பதிக்கு லட்டு தயாரிக்க நெய் அனுப்பியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு நாட்களாக ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், நிர்வாக இயக்குனர் சுப்பையனின் ஆய்வின்போது தரமற்ற இயந்திரங்கள், கருவிகள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மதுரை ஆவினில் 2019-2020ல் ரூ.30 கோடிக்கு தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் தணிக்கை நடக்காததை சாதகமாக்கி ரூ.30 கோடி வைப்புத்தொகையை வீணடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆவின் நிறுவனம் மாதம் ஒன்றிற்கு ரூ.30 லட்சம் மின்கட்டணமாக செலுத்தி வந்த நிலையில், இதனை குறைப்பதற்காக மதுரை கப்பலூரில், ரூ.13 கோடிக்கு தொடங்கப்பட்ட சோலார் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்கப்படவில்லை என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த மோசடி நடந்த 2019-2020-ல் பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புள்ளதா என்றும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

6 minutes ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

35 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

1 hour ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

2 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

2 hours ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

3 hours ago