மதுரை : முதல்வர் பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம்.!

Published by
Ragi

வடபழஞ்சியில் கொரோனா நோயாளிகளுக்காக கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை போன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மதுரை இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து பலர் மீண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமும் , ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை, தியாகராஜர் என்ஜினியரிங் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி, வேளாண்மை கல்லூரி, திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தல் மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், வடபழஞ்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான எல்காட் அலுவலகத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளனர். அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்கள், ஐசியூ என அனைத்து வசதிகளுடன் 900 படுக்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவமனையை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Published by
Ragi

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

6 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

7 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

7 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

8 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago