[Image source : Twiter / @itzGunaa]
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி திக் விஜயம் நடைபெற்றது. அடுத்து நேற்று 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
நேற்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் திருமண வைபோகத்தின் போது தங்கள் தாலியை புதுப்பித்து கட்டி கொண்டனர்.
இதனை தொடர்ந்து இன்று 11ஆம் நாள் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் மதுரை வீதிகளில் வீதிஉலா வருவர். தற்போது இந்த வைபவம் நடைபெற்று வருகிறது. மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தேர்களை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து வருகின்றனர். நாளை மறுநாள் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற உள்ளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…