Madurai High Court [Image source : The Hindu ]
மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை செப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த ரயில் தீவிபத்து தொடர்பாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 போரையும் செப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த தீபக், பிரகாஷ் ரஷ்தோகி, சுபம் காஷ்யப், நரேந்திரகுமார் மற்றும் ஹர்திக் சஹானே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையில் ஆக.26ம் சுற்றுலா வந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்று உள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…