தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கான சித்த மருத்துவ மையம் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!

Published by
Rebekal

கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதிலும் சித்த மருத்துவ மையத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையிலான மருத்துவர்களும் மாநகராட்சி ஊழியர்களும் வழி எழுப்பியுள்ளனர்.

அப்பொழுது அங்கு பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சென்னையில் பரவும் விதம் குறைந்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி முதல் செயல்பட்டு வரக்கூடிய இந்த சித்த மருத்துவ மையத்தில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற 8 பேர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். யாருக்குமே ஆக்சிஜன் பயன்பாடு தேவைப்படவே இல்லை.

உணவே மருந்து என்னும் அடிப்படையில் தான் இங்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. அனைத்து நோய்களுக்கும் எதிராக உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக்கக்கூடிய சித்த மருத்துவ முறை தான் இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே தமிழகம் முழுவதிலும் விரைவில் சித்த மருத்துவ மையம் ஆரம்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்படும் எனவும் நோய் தொற்று ஏற்படக்கூடியவர்களுக்கு பயம் இல்லாத சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

45 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

5 hours ago