பொதுத்தேர்வு குறித்து 2, 3 நாள்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்- உதயநிதி ஸ்டாலின்.!

Published by
Dinasuvadu desk

இன்று அமைச்சர் செங்கோட்டையனை,  திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி முதல்  ஏப்ரல் 13-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்தநிலையில் மார்ச் 24-ம் தேதி  நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 10-ம் வகுப்புத் தேர்வு  ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் வரைநடைபெறும்  என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 10-ம் வகுப்புத் தேர்வை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலதரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்புத் தேர்வை ஜூன் 15-ம் தேதி முதல்  25-ம் தேதிவரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதற்க்கான புதிய தேர்வு அட்டவணையையும் அரசு வெளியிட்டது. இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையனை, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது ,  10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலையில் நடத்தினால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து  2 அல்லது 3 நாள்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும். எங்களின் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், 15 நாட்கள் தேர்வைத் தள்ளி வைக்கும் அரசின் முடிவை திமுக வரவேற்பதாக தெரிவித்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago