இன்று அமைச்சர் செங்கோட்டையனை, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்தநிலையில் மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 10-ம் வகுப்புத் தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் வரைநடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 10-ம் வகுப்புத் தேர்வை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலதரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்புத் தேர்வை ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இதற்க்கான புதிய தேர்வு அட்டவணையையும் அரசு வெளியிட்டது. இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையனை, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலையில் நடத்தினால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2 அல்லது 3 நாள்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும். எங்களின் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், 15 நாட்கள் தேர்வைத் தள்ளி வைக்கும் அரசின் முடிவை திமுக வரவேற்பதாக தெரிவித்தார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…