இந்தி மொழி விவகாரம் தொடர்பாக பேசிய வைகோ, மமதை, ஆணவத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் மிரட்டியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஆன்லைன் நடைபெற்றது. இந்த பயிற்சியில் வகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தில் இருந்து 37 பேர் பங்கேற்றனர். அப்போது, மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். அந்நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர்.
இதற்கு ராஜேஷ் கொடேஜா, எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்று கூறி, இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மமதை, ஆணவத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் மிரட்டியுள்ளார் என்றும் மத்திய அரசு இத்தகையை போக்கை கைவிட்டு ஆயுஷ் அமைச்சகம் செயலர் ராஜேஷ் வைத்தியாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…