குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கட்சிகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களையும் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.அவ்வாறு இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை வடகிழக்கு மாநிலங்கள் காட்டி வந்த நிலையில் மேற்கு வங்கமும் இதற்கு விதி விலக்கல்ல அங்கும் போராட்டம் நடந்தது.ஒரு கட்டத்தில் கலவரமாக மாறி போராட்டக் காரர்கள் இரயில்கலுக்கு தீ வைத்து கொழுத்துவிட்டனர்.இதனால் இரயில் சேவை பாதிக்கப்பட்டது.மேலும் இணையசேவையும் முடக்கப்பட்டது.
சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் குரல் கொடுத்தும்,போராட்டம் மற்றும் பேரணிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டம் மூலம் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது இந்த கடுமையான ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது இந்தியாவின் ஜனநாயக ஆன்மாவை காப்பாற்ற அமைதியான,ஆழமான போராட்டங்கள் அவசியம்.
நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்’ ஜனநாயகத்தை காக்க போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்க வர வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இந்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பா.சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கு கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…