இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Published by
பால முருகன்

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம்.

இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில்39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே  தொடங்கிய நிலையில், பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர்  மன்சூர் அலிகான், தான் போட்டியிடும் வேலூர் தொகுதியில் , வாக்குகள் பதிவாகும் இடங்களை பார்வையிட்டு வாக்கு அளிக்க வந்த போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

எனவே, வேலூர் தொகுதியில் எங்கு எல்லாம் வாக்குகள் பதிவாகும் இடங்கள் இருக்கிறதோ அங்கு எல்லாம் நேரடியாக சென்று பார்வையிட்டார்.  அப்போது வாக்குகள் பதிவாகும் சில இடங்களில் தன்னுடைய பலாப்பழ சின்னம் தெளிவாக தெரியவில்லை ரொம்பவே இருட்டாக இருக்கிறது என்றும் பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு? என்றும் கூறி  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதைப்போல, வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்கள் இடமும் வெளிச்சத்தில் இல்லை தெளிவான இடத்தில் வைக்கவேண்டும் எனவும்,   சில இடங்களில் தன்னுடைய சின்னம் தெரியாதவாறு, வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரங்கள் இருட்டில் உள்ளது வேறு இடத்திற்கு உடனே மாற்றுங்கள் என்று கூறி குற்றமும் சாட்டியுள்ளார்.

அதன்பின், கொணவட்டம் பகுதியில் இருக்கும் உள்ள அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று அங்கு வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டு தனது வாக்கையும் செலுத்தினார். மேலும், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

3 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

4 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

4 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

5 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

5 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

6 hours ago