தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாடுகளில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் கலந்துகொள்ள 10 பேருக்கு மட்டுமே அனுமதி.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 6,000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கோவிலில் நடைபெறும் திருமண விழாவில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. மேலும், கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும், ஒதுக்கீடு செய்யப்படும் நேரத்தில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். திருமண விழாக்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…