தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் இருந்த நிலையில், இன்று 38-வது மாவட்டமாக உதயமாகிறது மயிலாடுதுறை. காணொளி காட்சி மூலம் புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி, வேலூர் மாவட்டங்களில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு என மொத்தம் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவானது.
இதனையடுத்து, இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசு ஆணை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காலை 9:30 மணிக்கு நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொளி காட்சி வழியாக மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்கிறது.
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…