நாளை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி இடங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை திமுக தலைமை வெளியிட்டிருந்தது.
அதன்படி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும், 1 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யபட்டது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வேட்பாளர்களை மதிமுக தற்போது வெளியிட்டுள்ளது. நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி துணை மேயராக எஸ். சூரியகுமார் போட்டியிடுகிறார். இதுபோன்று மாங்காடு நகராட்சியின் தலைவர் பதவிக்கு மதிமுக வேட்பாளர் சுமதி போட்டியிடுகிறார்.
பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகிய நகராட்சிகளின் துணைத் தலைவர் பதவிகளும் மதிமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக அணியில் திருவேங்கடம், ஆடுதுறை, சென்னசமுத்திரம் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மதிமுக கட்சி போட்டியிடும். பாளையம், அவல்பூந்துறை, அரச்சலூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கும் திமுக அணியில் மதிமுக கட்சி போட்டியிடும்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…