#breaking:மீரா மிதுனுக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – நீதிமன்றம் உத்தரவு..!

Published by
Edison

மீரா மிதுனை வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். அங்கு நெருங்கிய ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்தாக தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக சென்னை சைபர் க்ரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று கைது செய்தார்கள்.

மீரா மிதுனுவை கைது செய்யும்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம் செய்வதாகவும், காவல்துறை என் மீது கை வைத்தால் நான் கத்தியால் குத்திக்கிட்டு செத்து போய்டுவேன் என ஒரு பரபரப்பான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டியிருந்தார்.

இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி (TRANSIT WARRANT) பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர்.இதனையடுத்து,காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.ஆனால்,அவர் சரியான ஒத்துழைப்பு வழங்வில்லை என தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து,அவர் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்நிலையில்,வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் அவர்கள் மீரா மிதுனை வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.ஆனால்,எந்த சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் அவரது ஆண் நண்பர் ஆகாஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Edison

Recent Posts

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

23 minutes ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

1 hour ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

2 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

3 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

3 hours ago