15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ‘எல்காட்’ டெண்டரில் பங்கேற்ற சீன நிறுவனம் ஒன்றுடன் நடைபெற்றுள்ள ஊழல் திருவிளையாடல்கள் பேரதிர்ச்சியளிக்கிறது. சீன நிறுவனம் இரு மாதிரிகளை (model) அளித்து அதன் சோதனை அறிக்கையும்(TestReport) கொடுத்திருந்தது.
ஒரு மாடல் செயல்திறனுக்கு 465 மதிப்பெண்கள்; இன்னொரு மாடல் 265 மதிப்பெண்கள். ஒன்று தரம் குறைந்தது என்றாலும் இரண்டும் ஒரே விலை. அதிமுக அரசு குறைந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிக்கு ஆர்டர் கொடுத்து ஒரு மடிக்கணினிக்கு ரூ.3000 விதம் அடைந்த சட்டவிரோத லாபம் மட்டும் 469 கோடி ரூபாய்.
மெமரி 4 ஜி.பி.யிலிருந்து 8 ஜி.பி.யாக அதிகரிக்கும் வசதி இருக்க வேண்டும் என்று டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வசதி இல்லை மேற்கண்ட வசதியை பெற ரூபாய் 2500 மதிப்புள்ள புதிய ‘மதர் போர்டை’ பயன்படுத்த வேண்டுமாம்.
அதிலும் நிறுவனத்திற்கு ரூ.392 கோடி லாபம். 1921 கோடி ரூபாய் திட்டத்தில் நிகழ்த்தியுள்ள மகாபாதக மெகா ஊழல் இது; மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ .1,475 கோடி ரூபாய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. மாபெரும் ஊழலுக்கு வித்திட்டுள்ள முதலமைச்சர் பழனிச்சாமி மீதமுள்ள 456 கோடி ரூபாயை நிறுத்திவைத்து, எந்தவித தயக்கமுமின்றி அந்நிறுவனத்தை ‘பிளாக் லிஸ்ட்’ செய்து தரக் குறைவான கணினியை வழங்கியதற்காக பெருந்தொகையினை அபராதமாக அந்த நிறுவனத்திலிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…