தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், மூன்றாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதே சமயத்தில், கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் சுமார் 10000க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்டது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம், சுமார் 20 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றும் தடுப்பூசிகள் கையிருப்பு தட்டுப்பாடுகள் உள்ளது எனவும் கூறியுள்ளார். செப்டம்பர் மாதத்தில் இதுவரை 1 கோடி பெருகும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தடுப்பூசி கையிருப்பு இருந்ததால், சிறப்பாக செயல்பட முடிந்தது எனவும் தெரிவித்தார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…