காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சி சட்டப்படி தடுக்கப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.
இதற்கு எதிராக கர்நாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முதன்மை அமர்வில் மேல்முறையீடு ஒன்றை செய்து இருந்தனர்.
இதனையடுத்து,மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்றுள்ளார்.
இதற்கிடையில்,எடியூரப்பா அவர்கள் ,சட்டத்திற்கு உட்பட்டு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்,எந்த காரணத்திற்காகவும் திட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலனை பாதுகாத்திட மேகதாது மட்டுமின்றி வேறு எந்த இடத்திலும் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதோடு,அதை தடுப்பதற்கு சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளும்”,என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக,தமிழகத்தில் உள்ள பல லட்சம் விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு காவிரி நீரையே நம்பி இருக்கிறார்கள்.எனவே, மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிடுமாறு அம்மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…