[Representative Image]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேரத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு வேளைகளில் தான் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது மேலும் வலுவடைந்து உள்ளது என்றும், இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதே போல, வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்துள்ளளது என்றும்,
வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் எனவும், இதனால், ஒடிசா, மேற்கு வங்கம் மட்டுமின்றி, தமிழக்த்தில் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்காசி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அக்டோபர் 1,2 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்றும், சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…