இன்று முதல் மேட்டுப்பாளையம் – உதகை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Published by
Edison

உதகை:இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் தமிழகத்தில் பல பகுதிகளில் சாலைகள்,வீடுகள் என மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேசமயம்,நீலகிரி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.குறிப்பாக கல்லார் – அடர்லி இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்து,மரங்களும் விழுந்தன. இவற்றைச் சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை வரும் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும்,குன்னூர்-உதகை இடையேயான ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,கல்லார் – அடர்லி இடையேயான ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவுற்றதால் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

3 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

21 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

1 hour ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago