இன்று முதல் மேட்டுப்பாளையம் – உதகை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Published by
Edison

உதகை:இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் தமிழகத்தில் பல பகுதிகளில் சாலைகள்,வீடுகள் என மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேசமயம்,நீலகிரி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.குறிப்பாக கல்லார் – அடர்லி இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்து,மரங்களும் விழுந்தன. இவற்றைச் சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை வரும் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும்,குன்னூர்-உதகை இடையேயான ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,கல்லார் – அடர்லி இடையேயான ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவுற்றதால் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago