எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : 10 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற சிறை கைதியை விடுவிக்க முடியாது!

Published by
Rebekal

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களை மட்டுமே விடுவிக்க முடியும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்துள்ளார். 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில்,  ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மீது தொடரப்பட்ட கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் கடந்த 2007 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து பழனிச்சாமியின் மனைவி தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பித்த தீர்ப்பில் பழனிசாமியை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் உள்துறை தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுலா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா அவர்கள் ஆஜராகி பேசிய பொழுது, 10 ஆண்டு சிறை தண்டனை காலத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் எனவும், ஆனால் பழனிசாமி என்று மனுதாரர் ஒன்பது ஆண்டுகள் 24 நாட்கள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை விடுதலை செய்வதற்கு இன்னும் 349 நாட்கள் குறைவாக இருப்பதால் அவர் விடுதலை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

34 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

1 hour ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

2 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

4 hours ago