Michaung Cyclone EB Bill
மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்னும் புறநகர் பகுதியில் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு ஆய்வு.! முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று மத்திய குழு முக்கிய ஆலோசனை.!
ஏற்கனவே பாதிக்கப்பட்ட 4 மாவட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.6000 உதவி தொகை வழங்கப்படும் எனவும், அவை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் மின்கட்டணம் குறித்தும் அறிவிப்பை தமிழக மின்சாரத்துறை அறிவித்தது. அதன்படி வெள்ள பாதிப்புகள் காரணமாக மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்த டிசம்பர் 18 வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 4 முதல் 6 வரையில் அபாரதத்துடன் பயனர்கள் மின் கட்டணம் செலுத்தி இருந்தால் அந்த அபராத தொகை அடுத்த முறை மின் கட்டணத்தில் கழித்து கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்து. இதனை தொடர்ந்து தற்போது டிசம்பர் மாத மின் கணக்கீட்டிற்கு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக மின் அளவீடு பல்வேறு பகுதிகளில் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால் , டிசம்பர் மாதம் மின் கட்டணமானது கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படியே மின் கட்டணத்தை செலுத்த பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…