மிக்ஜாம் புயல் பாதிப்பு.! 4 மாவட்ட மின் கட்டணம் எவ்வளவு.? வெளியான முக்கிய தகவல்…

Published by
மணிகண்டன்

மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்னும் புறநகர் பகுதியில் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு ஆய்வு.! முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று மத்திய குழு முக்கிய ஆலோசனை.!

ஏற்கனவே பாதிக்கப்பட்ட 4 மாவட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு  ரேஷன் கார்டுக்கும் ரூ.6000 உதவி தொகை வழங்கப்படும் எனவும், அவை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் மின்கட்டணம் குறித்தும் அறிவிப்பை தமிழக மின்சாரத்துறை அறிவித்தது. அதன்படி வெள்ள பாதிப்புகள் காரணமாக மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்த டிசம்பர் 18 வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 4 முதல் 6 வரையில் அபாரதத்துடன் பயனர்கள் மின் கட்டணம் செலுத்தி இருந்தால் அந்த அபராத தொகை அடுத்த முறை மின் கட்டணத்தில் கழித்து கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்து. இதனை தொடர்ந்து தற்போது டிசம்பர் மாத மின் கணக்கீட்டிற்கு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக மின் அளவீடு பல்வேறு பகுதிகளில் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால் , டிசம்பர் மாதம் மின் கட்டணமானது கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படியே மின் கட்டணத்தை செலுத்த பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recent Posts

“மதுரை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!” தவெக தலைவர் விஜயின் முதல் பேட்டி!

சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

16 minutes ago

வாட்டி வதைக்க காத்திருக்கும் வெயில்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!

சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…

49 minutes ago

”அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி” – மத்திய அரசின் புதிய உத்தரவு.!

டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…

1 hour ago

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

‘ரெட்ரோ’ ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…

2 hours ago

அதிகரிக்கும் வெயில்.., பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அப்டேட்!

திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…

3 hours ago