5 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல்..!

Published by
murugan

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  ‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு 290 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு -தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே புயல் கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர புயலாக கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும்,  சில நிமிடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கூட காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தற்போது மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

‘மிக்ஜாம்’ புயலால் சென்னையில் கனமழையுடன்  70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாமுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வடக்கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

‘மிக்ஜாம்’ புயலால்  சூளேரிக்காடு, மாமல்லபுரம், கொக்கிலமேடு, புதுப்பட்டினம், காசிமேடு, எண்ணூரில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.  சென்னையில் இன்று காலை வரை வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று காலை வரை சென்னையில் 680.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தைவிட 6% குறைவாக பெய்துள்ளது.

அக்டோபர் 1 முதல் இன்று வரை வழக்கமாக 367.4 மி.மீ பதிவாக வேண்டிய சூழலில், 346.6 மி.மீ மட்டுமே பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago