[file image]
சென்னையில் சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குழப்பம் நீடிக்கிறது.
சென்னை எழிலகத்தில் சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஊதியம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து போராட்டம் நடைபெற்ற நிலையில், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் கீதா ஜீவன் நேரடியாக சென்று உறுதி அளித்ததாகவும், இதானால் 3 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
அமைச்சர் கீதா ஜீவன் நேரடியாக சென்று சத்துணவு ஊழியர்கள், நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், போராட்டம் வாபஸ் என்ற அறிவிப்பு தொடர்பாக சத்துணவு சங்க நிர்வாகிகளுடன், ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு நம்பிக்கை தரவில்லை என சத்துணவு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குழப்பம் நீடித்து வருகிறது. சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக் கொள்ள ஒரு தரப்பினர் முடிவு செய்திருப்பதாகவும், போராட்டம் நடத்துவதா? முடிவுக்கு கொண்டு வரலாமா? என்பது குறித்து சத்துணவு ஊழியர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…