மேகதாது அணை விவகாரம் : டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன்.!

Published by
மணிகண்டன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவேரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு மிக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் நதிநீர் பங்கீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழக அரசு கர்நாடக அரசுடன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையிடுவதே சரியானது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருந்தது.

இந்நிலையில் நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக முதல்வர் உடன் ஆலோசனை நடத்தினார் . அதன் பிறகு இன்று காவிரி மேலாண்மை அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்கு அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்ல உள்ளார் மேலும் இந்த பயணத்தின் போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கையும் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

21 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago