Tamilnadu Minister Duraimurugan - Supreme court [File Image]
கர்நாடக அரசு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு தண்ணீர் தர கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது குறித்து பேசுகையில், காவேரி விவகாரத்தில் நாங்க தமிழகம் சார்பாக 10 பேர், அவங்க கர்நாடக சார்பாக 10 பேர் சேர்ந்து பேசுகிறோம். அவங்க காவிரியில் தண்ணீர் இல்லைனு சொல்றாங்க. நாங்கள் காவிரியில் தண்ணீர் இருக்குனு சொல்கிறோம்.
காவேரி மேலாண்மை வாரியம் கடந்த 13.09 .2023 அன்று 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால் இப்போதைக்கு 5 ஆயிரம் தண்ணீர் தான் திறந்து விடுகிறார்கள். இது தொடர்பாக காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் இதனை தான் கேட்டேன். நாளைக்கு உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. எங்களது ஒரே நம்பிக்கை தற்போது உச்சநீதிமன்றம் தான். ஆஃப் த ரெக்கார்டு நீங்க எந்த பக்கம் சார் இருக்கீங்க? என்று விளையாட்டாக கேட்டுவிட்டு கூட வந்தேன் என பேட்டியளித்தார் அமைச்சர் துரைமுருகன்.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…