வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உலகத்தமிழ் நிறுவனம் சார்பாக லண்டனில் நான்காவது சர்வதேச மருத்துவ சிறப்பு விருது வழங்கும் விழா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை அவரது சார்பில் அவரது மகனும், மருத்துவருமான இளஞ்செழியன் மற்றும் அவரது மருமகள் கிருத்திகா இளஞ்செழியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து இந்த விருதினை பெற்ற அமைச்சர் சுப்பிரமணியனுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, மாரத்தான் வீரராகத் தன்னை நிரூபித்த மா.சுப்பிரமணியன் அவர்கள், தற்போது மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சராகவும் தன் ஆற்றலை நிரூபித்துப் பெற்றிருக்கும் Outstanding Response To Covid19 எனும் உலகளாவிய அங்கீகாரத்துக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…