சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 129 வது மெய்நிகர் திரை மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து அப்போட்டியில் பங்கேற்றார்.
அதிகாலை 4.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து போட்டியில் பங்கேற்ற அமைச்சர் 21 கிமீ தொலைவுக்கு நீண்ட மாரத்தானை,மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவு இடத்தில் நிறைவு செய்தார்.இந்த போட்டியில் அவருடன் காவல்துறையினர்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:
“கொரோனா பெருந்தொற்று பிறகு 10 நாட்கள் கழித்து உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு என்ற வகையில் தினமும் 10 கிமீ ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தாலும் ஓடும் பழக்கத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த பெருந்தொற்று காலத்தில் அரசுப் பணி கூடுதலாக மேற்கொள்ள வேண்டியிருந்ததால் கடந்த இரண்டு மாத காலமாக எந்தவிதமான பயிற்சியும் செய்யாமல் இருந்தேன்.தற்போது கடந்த 10 நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.அதனால்,இந்த மாரத்தான் போட்டியில் 21 கிமீ ஓடியது சாத்தியமானது.
முன்னதாக திமுக ஆட்சியில் விளையாட்டு பயிற்சிகளுக்கான விழிப்புணர்வு,மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது.ஆனால்,கடந்த ஆட்சியில் அதில் கவனம் செலுத்த தவறவிட்டனர்.எனினும்,தற்போது இளைஞர்கள்மேல் அக்கறை கொண்டுள்ள அரசு வந்திருப்பதால், எதிர்காலங்களில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் இருக்கும்”,என்று தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…