இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியா முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் ஊரடங்கை பின்பற்றுவோம் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனால் தமிழகத்தில் பேருந்துகள், ரயில் சேவை, வணிக வளாகம், சிறிய மளிகை கடை முதல் பெரிய கடைகள் இயங்கவில்லை. மேலும், மக்கள் பலரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், மக்கள் வீட்டிலேயே இருந்ததற்கு நன்றி என கூறினார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த பதிவில், காலை வணக்கம். மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்கியதற்கு நன்றி. நாம் ஒன்றிணைந்து இந்த வைரஸ் பரவுவதின் சங்கிலியை உடைப்போம் . இனிய ஞாயிறு வாழ்த்துக்கள் எனவும்,நம்மைநாமே பார்த்துக்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர், மற்றவர்களை போலவே தானும் வீட்டிலிருந்தே வேலைபார்ப்பதாக கூறினார். இதுகுறித்து அவர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் ,அவர் மூத்த அதிகாரிகளுடன் நானும் வீட்டில் வேலைபார்க்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு உத்தரவு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…