இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியா முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் ஊரடங்கை பின்பற்றுவோம் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனால் தமிழகத்தில் பேருந்துகள், ரயில் சேவை, வணிக வளாகம், சிறிய மளிகை கடை முதல் பெரிய கடைகள் இயங்கவில்லை. மேலும், மக்கள் பலரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், மக்கள் வீட்டிலேயே இருந்ததற்கு நன்றி என கூறினார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த பதிவில், காலை வணக்கம். மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்கியதற்கு நன்றி. நாம் ஒன்றிணைந்து இந்த வைரஸ் பரவுவதின் சங்கிலியை உடைப்போம் . இனிய ஞாயிறு வாழ்த்துக்கள் எனவும்,நம்மைநாமே பார்த்துக்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர், மற்றவர்களை போலவே தானும் வீட்டிலிருந்தே வேலைபார்ப்பதாக கூறினார். இதுகுறித்து அவர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் ,அவர் மூத்த அதிகாரிகளுடன் நானும் வீட்டில் வேலைபார்க்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு உத்தரவு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…