அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. 3-வது முறையாக தள்ளுபடி…!

Published by
murugan

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம் அமர்வில் 2 முறை  தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து  3-வது முறையாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கொடநாடு வழக்கு – ஈபிஎஸ் சாட்சியப்பதிவு தாக்கல்..!

இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய கோரி  வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு கடந்த திங்கள் கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது,  அமலாக்கத்துறை தரப்பில்  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்தனர். இதைதொடந்து,  இந்த வழக்கின் விசாரணையை அடுத்த நாளான 9-ம் தேதி (அதாவது செவ்வாய் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், கடந்த 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வரும் 12-ஆம் தேதி ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படுவதாக கூறி நீதிபதி அல்லி வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை 3-வது முறையாக சென்னை முதன்மை  நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்க வாய்ப்புள்ளது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு நேற்று மீண்டும்  நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 15-வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

22 minutes ago

என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் -பாமக நிறுவனர் ராமதாஸ் திட்ட வட்டம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

45 minutes ago

விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

58 minutes ago

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…

1 hour ago

நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…

1 hour ago

400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!

அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ்,  ஈரானின் மூன்று…

2 hours ago