முக்கியச் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் அலுவலகத்துக்கு சீல்… அமலாக்கத்துறை.!

Published by
Muthu Kumar

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.

கரூரில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையை அடுத்து, கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு அழைத்துச்செல்லும்போது நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் இன்று கரூர் அலுவலகத்தில் தொடர்ந்த சோதனைக்கு பிறகு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் ஒட்டி, அவரது சகோதரர் நடத்திவரும் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

மேலும் தங்கள் அனுமதியின்றி திறக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சென்னையிலுள்ள அலுவலகத்தில் இது குறித்து நேரில்  விளக்கம் தர வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

3 minutes ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

3 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

4 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

4 hours ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

5 hours ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

5 hours ago