SenthilBalaji Karur [File Image]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.
கரூரில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையை அடுத்து, கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு அழைத்துச்செல்லும்போது நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் இன்று கரூர் அலுவலகத்தில் தொடர்ந்த சோதனைக்கு பிறகு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் ஒட்டி, அவரது சகோதரர் நடத்திவரும் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
மேலும் தங்கள் அனுமதியின்றி திறக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சென்னையிலுள்ள அலுவலகத்தில் இது குறித்து நேரில் விளக்கம் தர வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…