செந்தில் பாலாஜி விவகாரம்.. எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்கும் ஆளுநர் ரவி.! அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

 செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்காமல் ஆளுநர் ரவி முடிவு எடுக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார் . 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவல் கட்டுப்பாட்டில் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டார். பின்னர் எதிர்ப்புகள் வந்த நிலையில், ஆளுநர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்பி வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர் மத்தியில் பேசினர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழக முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்ப உள்ளார் என தெரிவித்தார்.

மேலும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ரவி முடிவு எடுக்க சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை. ஒரு அமைச்சரை நீக்குவதும் சேர்ப்பதும் முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. பொதுவாக ஆளுநர் எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுத்து வருவதை தமிழக அரசு நிராகரிக்கிறது என கூறினார்.

அடுத்ததாக, ஒரு அமைச்சரை அமைச்சரவையில் சேர்ப்பதும் நீக்குவதும் முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நடைபெறும். திமுக எதனையும் சட்டரீதியாக எதிர்கொண்டு இன்றைய நாள் வரை வெற்றி பெற்றுள்ளது. 2ஜி வழக்கு , சர்க்காரியா கமிஷன் என பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு, பின்னர் அதில் இருந்து நாங்கள் வென்று வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார். மேலும் எதிர்க்கட்சியினர் மீதும் பல்வேறு ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் செந்தில் பாலாஜி விவாகரத்தை மட்டும் எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளுநர் தரப்பினர் குறி வைத்து சொல்வது ஏன் என்று தெரியவில்லை. ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டதாலயே அவர் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவசியம் இல்லை இதில் எதோ அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

50 minutes ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

2 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

3 hours ago

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

4 hours ago