நேற்று இரவு முழுவதும் என் கனவில் அமைச்சர் தங்கமணி வந்தார் -அன்பில் மகேஷ்

சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைப் பெற்றது. அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் கஜா மற்றும் ஒக்கி புயலின் போது மின் ஊழியர்கள் மிக சிறப்பாக பணியாற்றினார் அவர்களுக்கு எனது நன்றி என கூறினார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ் , மின்துறை பற்றிய விவாதத்தை நான் இன்று பேச இருந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் என் கனவில் மின்துறை அமைச்சர் தங்கமணி தான் வந்தார். அப்போது அவர் என்னிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்தார் என கூறினார்.
பிறகு பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ” நான் எப்போதும் சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாக பேசியது இல்லை என கூறினார்.தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி அன்பில் மகேஷ் தன் தொகுதி பிரச்சனையை மட்டும் பேசி வருவார் ஆனால் தற்போது ஆரம்பத்திலே அமைச்சர் கனவில் வந்து ஆக்ரோஷமாக பேசினார் என கூறுவது உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது என கூறினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025