sailingboattrip [Image Source : Twitter/@Udhaystalin]
பெண் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.
அதில் ஒரு பகுதியாக சென்னை முதல் கோடியக்கரை வரை சுமார் 1,000 கி.மீ கடல் வழி துரம், 25 மகளிர் காவலர்கள் அடங்கிய குழு பயணம் செய்கின்றனர். பிறகு, கோடியக்கரையில் இருந்து ஜூன் 18ம் தேதி சென்னை வர உள்ளனர். இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பொன்விழா காணும் மகளிர் காவல்துறையை போற்றும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றின் ஒரு பகுதியாக 1000 கி.மீ கடல்வழி தூரத்தை மகளிர் காவலர்கள் அடங்கிய குழு பாய்மரப்படகுகள் மூலம் கடக்கவுள்ளது. அந்த சாகசப் பயணத்தை சென்னை துறைமுகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம். நம் மகளிர் காவலர்களின் தீரமிகு முயற்சி வெல்லட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…