கால்பந்தாட்டம் மீது கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

Published by
மணிகண்டன்

சென்னை ராயப்பேட்டையில் கால்பந்தாட்ட போட்டியை துவங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இன்று சென்னை ராயப்பேட்டையில் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தொடங்கி வைத்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக விளையாட்டுத்துறை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்..

அவர் கூறுகையில், திமுகவுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. அதானால் தான் திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டது. திமுக தலைவர் கலைஞருக்கு கால்பந்தாட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகையில் கூட, கால்பந்தாட்டத்தில் பந்தை எப்படி வேண்டுமானாலும் விதவிதமாக கையாளலாம். ஆனால் கோல் போஸ்ட்டிற்குள் பந்து சென்றால் மட்டுமே வெற்றி. அதுபோல தான் வாழ்வும்  என குறிப்பிட்டு இருப்பார் என கலைஞர் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.

அடுத்து தமிழக முதல்வருக்கு பேட்மிட்டன், கிரிக்கெட் போட்டிகள் பிடிக்கும். எனக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் காரணமாக தான் விளையாட்டு துறை அமைச்சராக என்னை முதல்வர் நியமித்தார். அமைச்சராக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிவிட்டன. அமைச்சரான பின்னர் நான் போட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கான கையெழுத்து தான்.

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 25ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும். அந்த போட்டிகளை காண முதல்வர் நேரில் வரவுள்ளார். ஆகஸ்ட் மாதம் சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. மத்திய விளையாட்டு துறை நமது செயல்பாடுகளை பார்த்து இந்தாண்டு கேளோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை விளையாட்டிலும் முதல் மாநிலமாக  கொண்டுவர தொடர்ந்து செல்படுவோம். தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம். சரவேதச அளவிலான விளையாட்டு அரங்கம் தமிழகத்தில் அமைக்கும் பனி ஆகியவை செயல்பாட்டில் உள்ளன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

15 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

15 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

16 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

16 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 hours ago