கரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயாவை பாராட்டிய அமைச்சர் வேலுமணி.
கரூர் மாவட்டம் முன்னூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் – சிவகாமி தம்பதிகளின் மகளான அபிநயா, அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து கோயம்புத்தூர் அரசு வேளாண்மை கல்லூரியில் இளநிலை விவசாயம் பயின்றார்.
இதனை தொடர்ந்து, அபிநயா டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்த நிலையில், தனது கனவான ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அபிநயா அடுத்தடுத்த தேர்விலும் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வில் கலந்து கொண்டு முடிவுக்காக காத்திருந்தார்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அபிநயா இந்திய அளவில் 559 ஆவது நபராக வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றிக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிற நிலையில், அமைச்சர் வேலுமணி அபிநயாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…