கரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயாவை பாராட்டிய அமைச்சர் வேலுமணி!

Published by
லீனா

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயாவை பாராட்டிய அமைச்சர் வேலுமணி.

கரூர் மாவட்டம் முன்னூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் – சிவகாமி தம்பதிகளின் மகளான அபிநயா, அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து கோயம்புத்தூர் அரசு வேளாண்மை கல்லூரியில் இளநிலை விவசாயம் பயின்றார்.

இதனை தொடர்ந்து, அபிநயா டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்த நிலையில், தனது கனவான ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அபிநயா அடுத்தடுத்த தேர்விலும் தேர்ச்சி பெற்று,  நேர்முக தேர்வில் கலந்து கொண்டு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அபிநயா  இந்திய அளவில் 559 ஆவது நபராக வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றிக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிற நிலையில், அமைச்சர் வேலுமணி அபிநயாவுக்கு தனது வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

13 minutes ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

2 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

4 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

5 hours ago