பேருந்து வசதி இல்லை என்று கூறிய பெண்ணுக்கு உடனைடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போன் செய்து அசத்தியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அமைச்சர்கள் செங்கோட்டையன்,செல்லூர் ராஜு,ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாங்குநேரி தொகுதியில் தெற்கு காடுவெட்டி பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது முதல்வன் படத்தில் வரும் காட்சிபோல புகார் அளித்த பெண் ஒருவருக்கு சம்பத்தப்பட்ட அமைச்சரிடம் உடனடியாக பேச வைத்துள்ளார். அதவாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பெண்மணி ஒருவர் பேருந்து வசதி இல்லை என புகார் அளித்துள்ளார்.இதற்கு உடனடியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளார்.மேற்கொண்டு புகார் அளித்த பெண்மணியையும் பேசவைத்து அசத்தியுள்ளார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சினையை சரி செய்வதாக தெரிவித்தார்.பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பிரச்சினை சரியாகிவிடும் என்று தெரிவித்தார்.இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…