மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும் என துணை சபாநாயகர் பேச்சு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று நடைபெற்றது. அப்போது, பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த வெற்றியிடத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்சி பாகுபாடியின்றி அனைவரும் பேச சட்டப்பேரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டத்தை மதித்து நாகரிகமான சபாநாயகராக நடந்து கொள்வேன் என சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார். எனக்கு வானளாவிய அதிகாரம் இல்லை, பேரவைக்கு தான் அதிகாரமே தவிர தனிப்பட்ட நபருக்கு அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புதிதாக பதவியேற்ற சபாநாயகர், துணை சபாநாயகருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினர். இதன்பின், தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த 2 நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய எம்எல்ஏக்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…