மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும் என துணை சபாநாயகர் பேச்சு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று நடைபெற்றது. அப்போது, பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த வெற்றியிடத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்சி பாகுபாடியின்றி அனைவரும் பேச சட்டப்பேரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டத்தை மதித்து நாகரிகமான சபாநாயகராக நடந்து கொள்வேன் என சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார். எனக்கு வானளாவிய அதிகாரம் இல்லை, பேரவைக்கு தான் அதிகாரமே தவிர தனிப்பட்ட நபருக்கு அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புதிதாக பதவியேற்ற சபாநாயகர், துணை சபாநாயகருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினர். இதன்பின், தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த 2 நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய எம்எல்ஏக்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…