நடமாடும் ஏடிஎம் : கோவையில் அசத்தும் HDFC வங்கி.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற யாரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதில் வங்கிகள் மட்டும் ஒரு சில இடத்தில் திறந்திருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. சமூக விலைகளை பின்பற்றி வரும் நிலையில், மக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் செலவுக்கு தங்களது வங்கியில் இருந்து பணங்கள் எடுப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஒரு சில வங்கிகள் மும்பை, புனே போன்ற இடங்களில் நடமாடும் ஏடிஎம் மையத்தை (mobileatm) உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக்தில் கோவை மாவட்டத்தில் hdfc வங்கி நடமாடும் ஏடிஎம் மையத்தை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் சமூக விலகலை பின்பற்ற முடியும் என்றும் வீடு வீடாக சென்று பணம் தேவைப்படும் நபர்களுக்கு இந்த நடமாடும் ஏடிஎம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago