பெண் காவலரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்த ரக்ஷாபந்த சகோதரர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு பேரவையில் புகழாரம்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறையில் முதன்முறையாக 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பெரியாரின் கனவு. அதை அண்ணா நிறைவேற்ற முயற்சித்தார், கலைஞர் சட்டமாக்கினார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி நவீன ராமானுஜராக திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார்.
பெண் காவலரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்த ரக்ஷாபந்த சகோதரர் முதல்வர் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 641 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சொத்துகளை மீட்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் செப் 17ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் தைத்திங்கள் முதல் நாள் அர்ச்சகர்கள் பூசாரிகள் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பாஜக உறுப்பினர் பேரவையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…