மோடி ஆட்சியின் தோல்வியை காட்டுகிறது – கே.எஸ்.அழகிரி

Published by
Venu

கொரோனா பரிசோதனைக் கருவிகளை தேடிக்கொண்டிருப்பது மோடி ஆட்சியின் தோல்வியை காட்டுகிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்தியாவின் மொத்த ஜி.டி.பி.யான ரூபாய் 225 லட்சம் கோடியில் ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் மத்திய அரசுக்கு 3 லட்சம் கோடி மிச்சம் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீது 12 முறை கலால் விலை உயர்த்தியதால் ரூபாய் 20 லட்சம் கோடி வருவாய் உயர்ந்திருக்கிறது. இதை நிவாரண உதவிக்கு பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 84 நாட்கள் ஆகியும் உரிய பரிசோதனைக் கருவிகளை தேடிக்கொண்டிருப்பது மோடி ஆட்சியின் தோல்வியை காட்டுகிறது.இதுதான் ஒரு திறமையான ஆட்சிக்கு இலக்கணமா? எனவே சுதந்திர இந்தியா காணாத சோதனையில் சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற மத்திய அரசிடமிருக்கும் அனைத்து நிதியாதாரங்களையும் பயன்படுத்தி உரிய செயல்திட்டங்களை வகுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“அடுத்த சீசன் கோப்பை எங்களுக்கு”…தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்!

“அடுத்த சீசன் கோப்பை எங்களுக்கு”…தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்!

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு…

4 minutes ago

கோப்பை பெங்களூருக்கு வர வேண்டும் என்பது எனது கனவு…முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா எமோஷனல்!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள்…

33 minutes ago

இன்று பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக பரிசு வழங்குகிறார் விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த…

1 hour ago

நார்வே செஸ் : குகேஷின் ஹாட்ரிக் வெற்றிக்கு செக் வைத்த ஹிகாரு நகமுரா!

நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger)…

1 hour ago

கோப்பையை வென்ற பெங்களூர் அணி…போராடி தோற்ற பஞ்சாப்! பரிசுத்தொகை எவ்வளவு?

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது.…

2 hours ago

குழந்தை போல தூங்குவேன்! கோப்பையை வென்றதால் எமோஷனலான விராட் கோலி!

அகமதாபாத் : ஐபிஎல் சீசன் தொடங்கி 18-ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்கிற விமர்சனத்தை வாங்கிக்கொண்டு…

2 hours ago