மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.இந்நிலையில் அண்ணா பிறந்த நாளில் 3 பேருக்கு நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமிருந்த 14 பேரில் ஒருவர் இறந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார். விடுதலை செய்ததற்கான அரசாணையை இன்னும் பெறவில்லை.எனவே அரசாணை நகலை வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று நீதிபதி வைத்தியநாதன் , வெங்கடேஷ் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றத்தில் அரசாணை குறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றமும் , உயர் மன்றம் வழங்கிய தீர்ப்பு நகல்கள் வழங்கப் பட்டன.இதை தொடர்ந்து நீதிபதிகள் மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கொலை வழக்கில் 13 குற்றவாளிகளுக்கு எதன் அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர் என்ற கேள்வி எழுப்பினர்.
வழக்கறிஞர் ரத்தினத்தின் மனு எதன் அடிப்படையில் பரிசீலினைக்கப்பட்டது ?என்பது குறித்து நீதிமன்றம் அறிய விரும்புகிறது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கும் போது அதற்கான பட்டியலை தயார் செய்து முன்னுரிமை அடிப்படையில் தான் விடுவிக்க வேண்டும். அந்த வகையில் தான் அவர்களுக்கு விடுதலை கொடுக்கப்பட்டதா ? எந்த அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டது என என்பது குறித்து நீதிமன்றம் அரிய விரும்புகிறது என கூறினார்.
மேலும் மனுதாரர் தரப்பில் 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்து வழக்கை 25-ம் தேதி ஒத்தி வைத்தனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…