நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகள், நடைபாதை பணிகள், அரசு அலுவலக கட்டிடங்கள் ஆகியவை தரமானதாக இல்லை என கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசு சார்பில் போடப்படும் சாலைகள் 6 மாதங்களில் பழுதடைந்து விடுவதாகவும், இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்வதில்லை என்றும் நீதிபதியிடம் புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதனையடுத்து, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், சாலைகள் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக உள்ள விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை, அடிப்படை கல்வியை முழுமையாக வழங்கப்படவில்லை, அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…