எம்பி கவுதம சிகாமணி ஆஜராக உத்தரவு – சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர்  பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதம சிகாமணி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராக கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது , செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பாஜகவுக்கு தாமரை சின்னம்- விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதனடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. கவுதம சிகாமணி உட்பட 6 பேருக்கு எதிராக 90 பக்க குற்றப்பத்திரிகையை சமீபத்தில்  தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நவ. 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். இதன்பின், அவரிகளிடம் விசாரணையும் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

2 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

5 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

5 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

6 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

9 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

9 hours ago