மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட எம்.பி கனிமொழி..!

Published by
murugan

தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த  கனமழையால்  குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை பாதிப்பில் இருந்து  தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள்  மீண்டுவரும் நிலையில், ஒருசில இடங்களில்  மழைநீர் வடியாமல் உள்ளது. மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா  ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பார்வையிட்டனர்.

அப்போது  F.C.I குடோன் எதிர்புறம் உள்ள திரு.வி.க நகர் பகுதியில் வெள்ளநீர் வடியாமல் தண்ணீர் தேங்கி நின்று இருந்தது. அந்த வெள்ள நீர் வெளியேறும் பகுதியான மீன் வளக்கல்லூரி அருகில் சென்று பார்வையிட்டனர். அங்கு வெள்ளநீர் வெளியேறுவதற்க்கு சில இடங்களில் தடைகளாக இருந்த மண்னை அகற்றி விட வேண்டி இருந்தது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆணையர் தினேஷ்குமார் பேசினார்.

அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் தடையாக இருந்த மண்னை சுத்தப்படுத்தி வெள்ளநீர் வெளியேற செய்தனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தண்ணீர் வெளியேறுவதற்க்கு வழிவகை செய்ய உதவினர்கள்.

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

5 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

26 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

40 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago