திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த கொரோனா வைரஸால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.’ என பதிவிட்டுள்ளார்.
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…