Murder : பாஜக நிர்வாகி கொலை வழக்கு : பாளையம்கோட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.!

Published by
மணிகண்டன்

சில தினங்களுக்கு முன்னர் நெல்லை பாளையம்கோட்டை பகுதியில் மூளிக்குளத்தை சேர்ந்த பாஜக இளைஞரணி பொறுப்பாளர் ஜெகன் பாண்டியன், மூளிக்குளதத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவரது கொலை சம்பவத்தை அடுத்து பாளையம்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் முதற்கட்டமாக அனிஸ், பாஸ்கர், சந்துரு, அஜித், விக்கி, வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பிரபல கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரை கைது செய்யவில்லை என கூறி உறவினர்கள் மற்றும் பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர் . மேலும், இந்த வழக்கில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

நேற்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மூளிக்குளம் பிரபுவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இன்று பாளையம்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியனை பணியிடை நீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குற்றத்தை தடுக்க தவறியதாக கூறி பொறுப்பு காவல் ஆணையர் பிரவேஷ் குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

1 hour ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

2 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

3 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago