BJP state executive murder case - Court custody [Image Source : Twitter/@sunnews]
பாஜக மாநில நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 9 பேருக்கும், மே 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு.
சென்னை பூவிருந்தமல்லியில் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக எஸ்.சி. எஸ்டி, மாநில பொருளாளரான பி.பி.ஜி சங்கர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற சங்கரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
பாஜக மாநில நிர்வாகி சங்கரை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின், பாஜக பட்டியல் அணியில் மாநில பொருளார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
அதன்படி, சரத், சங்கர் குமார், ஜெயன், சஞ்சீவ், குணா, சந்தான குமார், தினேஷ், உதயகுமார், ஆனந்த் ஆகிய 9 பேர் சரணடைந்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தொழில் போட்டியில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பாஜக மாநில நிர்வாகி சங்கர் கொலை வழக்கில் சரணடைந்த 9 பேருக்கும், மே 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…