முக்கியச் செய்திகள்

காதல் திருமண ஜோடி படுகொலை- மேலும் 3 பேர் கைது..!

Published by
murugan

தூத்துக்குடியில் காதல் திருமண செய்த மாரிச்செல்வம் – கார்த்திகா வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி, முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கார்த்திகா  பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மாரி செல்வம் பெற்றோர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், கடந்த 30-ஆம் தேதி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் மாரி செல்வமும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொண்டு பின்னர் தூத்துக்குடிக்கு திரும்பி உள்ளனர்.

தங்களின் எதிர்ப்பை மீறி கார்த்திகா திருமணம் செய்ததால் அவரின் குடும்பத்தினர் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில் முருகேசன் நகரில் புதிதாக காதல் திருமண செய்த  மாரி செல்வமும், கார்த்திகாவும் ஒரு வீட்டில் இருந்துள்ளனர். நேற்று மாலை 3 பைக்கில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீடு புகுந்து மாரி செல்வம், கார்த்திகேயன் இருவரையும் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர்.

இதையெடுத்து சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் கார்த்திகாவும், மாரி செல்வம் உயிரிழந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாரிச்செல்வம், கார்த்திகா இருவரின் உடல்களையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் உயிரிழந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

இந்நிலையில், மாரிச்செல்வம், கார்த்திகா வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கி ராஜா, ராஜபாண்டி மற்றும் ஒரு சிறுவன் என மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
murugan
Tags: #Thoothukudi

Recent Posts

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

15 minutes ago

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…

2 hours ago

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…

2 hours ago

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…

4 hours ago

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…

5 hours ago

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…

6 hours ago