கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!

Published by
Rebekal

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் எனவும் ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததால ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் நான் சொல்வது தான் கேட்க வேண்டும் எனவும் இவர் கூறி வந்துள்ளார்.
நிலையில் மணிகண்டன் வசித்து வரக்கூடிய அதே பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு  என்பவரின் நண்பர் சிவாவிடம் ஆனந்தபாபு உடன் சேர்ந்து இனி ஏரியாவில் நீ சீன் போட கூடாது, நான் மட்டும் தான் போடுவேன் மீறினால் கொலை செய்துவிடுவேன் என கூறியுள்ளார். ஆனந்தபாபு ஒரு கூட்டமாகவும் மணிகண்டன் ஒரு கூட்டமாகவும் ஏரியாவில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஏரியாவில் இந்த இரண்டு கேங்க்கும் இடையில் அண்மையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஆனந்தபாபுவின் நண்பர்களான சிவா, கார்த்திக், ஸ்ரீதர், பரத்வராஜ் அனைவரும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 23ஆம் தேதி மாலை மணிகண்டன் வழக்கம்போல ஆட்டோ ஓட்டி விட்டு பத்து மணியளவில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இந்த குழு அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர், இந்நிலையில் இவர்கள் அனைவரையும் போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடி வந்த நிலையில் ஐவரும் தாங்களாகவே நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளனர். தற்பொழுது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆனந்தபாபு மீது ஏற்கனவே திருட்டு அடிதடி, வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

3 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

7 minutes ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

38 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago