கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!

Published by
Rebekal

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் எனவும் ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததால ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் நான் சொல்வது தான் கேட்க வேண்டும் எனவும் இவர் கூறி வந்துள்ளார்.
நிலையில் மணிகண்டன் வசித்து வரக்கூடிய அதே பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு  என்பவரின் நண்பர் சிவாவிடம் ஆனந்தபாபு உடன் சேர்ந்து இனி ஏரியாவில் நீ சீன் போட கூடாது, நான் மட்டும் தான் போடுவேன் மீறினால் கொலை செய்துவிடுவேன் என கூறியுள்ளார். ஆனந்தபாபு ஒரு கூட்டமாகவும் மணிகண்டன் ஒரு கூட்டமாகவும் ஏரியாவில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஏரியாவில் இந்த இரண்டு கேங்க்கும் இடையில் அண்மையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஆனந்தபாபுவின் நண்பர்களான சிவா, கார்த்திக், ஸ்ரீதர், பரத்வராஜ் அனைவரும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 23ஆம் தேதி மாலை மணிகண்டன் வழக்கம்போல ஆட்டோ ஓட்டி விட்டு பத்து மணியளவில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இந்த குழு அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர், இந்நிலையில் இவர்கள் அனைவரையும் போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடி வந்த நிலையில் ஐவரும் தாங்களாகவே நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளனர். தற்பொழுது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆனந்தபாபு மீது ஏற்கனவே திருட்டு அடிதடி, வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago